
மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரை யினாள்
- குறள் எண்: 617
தற்போதைய உரை விளக்கங்கள்:
பரிமேலழகர் உரை: கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர்.
கலைஞர் உரை: திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.
மு.வ உரை: ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
சாலமன் பாப்பையா உரை: சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவாள். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.
உரைத் தவறுகள்:
மேற்காணும் உரைகள் அனைத்தும் 'மாமுகடி' என்ற சொல்லிற்கு 'கரிய சேட்டை ஆகிய மூதேவி' என்றும் 'தாமரையினாள்' என்ற சொல்லிற்கு 'திருமகள்' என்றும் பொருள் கூறுகின்றன. மற்றவர்கள் இவ்வாறு பொருள் கூறியிருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இறைவனின் இருப்பினையே மறுக்கின்ற கொள்கையை உடையவர் கலைஞர். திருக்குறளின் கடவுள் வாழ்த்திற்கு இவர் எழுதியுள்ள உரை விளக்கங்களே இதற்குப் போதுமான சான்றுகளாகும். இவர் எப்படி, ஏன் இப் பொருள்களைக் கூறியுள்ளார் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!.
இது ஒருபுறமிருக்க, மூதேவியும் திருமகளும் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்த கடவுள்களின் பெயர்கள் என்னும் உண்மையினை நாம் நன்கு அறிவோம். திருவள்ளுவர் சமயச்சார்பற்றவர் என்றும் எந்த ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சமயம் சார்ந்த கருத்துக்களையும் அவர் கூறுவதில்லை என்னும் உண்மையினையும் நாம் முன்பே 'ஆதிபகவன் யார்', 'தாமரைக் கண்ணான் உலகு', இந்திரனே சாலும் கரி', 'செய்யவள் தவ்வை', 'பொறிவாயில் ஐந்தவித்தான்' போன்ற கட்டுரைகளில் ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். அவ் வகையில், இக் குறளிலும் அவர் ஒரு குறிப்பிட்ட சமயம் சார்ந்த கருத்துக்களைக் கூறி இருக்க முடியாது அல்லவா?. எனவே இக் குறளுக்கு மேலே கூறப்பட்டுள்ள உரை விளக்கங்கள் யாவும் தவறானவையாகவே கொள்ளப்படுகின்றன.
அதுமட்டுமின்றி மேலேகண்ட உரைவிளக்கங்களில் சொல்லப்படுவதான 'சோம்பல் இல்லாமல் முயல்பவனிடத்தில் திரும்கள் தங்குவாள். சோம்பேறியிடத்திலே மூதேவி தங்குவாள்' என்னும் கருத்தைப் போலவே கீழ்க்காணும் குறள் உள்ளது.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். - எண்: 616
இதன் பொருள்: சோம்பல் இன்றி முயல்பவனிடத்தில் செல்வம் (திருமகளின் அருள்) பெருகும். முயற்சியற்ற சோம்பேறியிடத்திலே வறுமையே (மூதேவியின் அருள்) மிகும்.
616 ம் குறளின் பொருளுக்கும் 617 ம் குறளின் விளக்கத்திற்கும் என்ன வேறுபாடு உள்ளது?. ஒன்றுமே இல்லை அல்லவா?. ஒரே கருத்தினை அடுத்தடுத்த இரண்டு குறள்களில் வள்ளுவர் ஏன் கூற வேண்டும்?. அவ்வாறு கூறுவது 'கூறியது கூறல்' குற்ற்மாகி விடும் என்பதை வள்ளுவர் நன்கு அறிவார். எனவே வள்ளுவர் 617 ம் குறளில் மேலே கண்ட கருத்தினைக் கூற விழையவில்லை என்பது பெறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இக்குறளுக்கு பல பாடபேதங்கள் காணக் கிடைக்கின்றன. 'மடியுளான் மாமுகடி' என்றும் ' மடியுளாள் மாமுகடி' என்றும் ' தாளுளான் தாமரையினாள்' என்றும் ' தாளுளாள் தாமரையினாள்' என்றும் பலவாறாகக் கூறப்படுகின்றன. இது இக்குறள் சிதிலமடைந்த நிலையில் கிடைத்திருக்குமோ என்று கருத இடமளிக்கிறது. எது எவ்வாறாயினும் இது இக்குறளில் எழுத்துப் பிழைகள் இருப்பதை உறுதி செய்கிறது. இனி பிழைகள் இன்றி திருந்திய குறளையும் திருந்திய பொருளையும் ஆதாரங்களுடன் காணலாம்.
திருந்திய பொருள்:
இக் குறளில் வரும் 'மாமுகடி' என்ற சொல் 'மாமுகரி' என்று இருந்திருக்க வேண்டும். மாமுகரி என்ற சொல் எருமைமாட்டினைக் குறிக்கும். அடுத்து, 'தாமரையினாள்' என்பதைக் கீழ்க் காணும் வகையில் பிரித்துப்பொருள் கொள்ள வேண்டும்.
தாமரையினாள் = தா + மரையின் + ஆள்
= தாவிச் செல்லும் மான் போன்றவன்.
தாளுளான் என்பதற்கு முயற்சி அல்லது வினையாற்றுபவன் என்று பொருள் கொள்ளவேண்டும். இனி திருந்திய குறள் இதுதான்:
மடியுளான் மாமுகரி என்ப மடியிலான்
தாளுளான் தாமரை யினாள்
இனி இக்குறளின் திருந்திய பொருள் இதுதான்: சோம்பல் மிகுதியால் செயல் புரியாமல் கிடப்பவனை எருமை மாடு என்று சொல்வார்கள். சோம்பல் இல்லாதவனாய் (ஓடித் திரிந்து) வினையாற்றுபவன் தாவிச் செல்லும் மான் போன்றவன் ஆவான்.'
நிறுவுதல்:

இந்தக் காலத்தில் மட்டுமல்ல வள்ளுவர் காலத்துக்கு முன்பாகவும் செயலேதும் புரியாத சோம்பேறிகளை 'எருமை மாடு' என்று குறிப்பிடுவது வழக்கம் போலும். அதனால் தான் இக்குறளில் வள்ளுவர் 'மாமுகரி என்ப' என்று கூறுகிறார். இந்த 'மாமுகரி' என்ற சொல் எவ்வாறு எருமை மாட்டினைக் குறிக்கும் என்று பார்க்கலாம்.
முகரி என்ற சொல்லின் இன்னொரு வடிவம் மூரி ஆகும்.
சான்று: சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி.
4. முகரி mukari : (page 3227)
முகரி³ mukari
, n. < முகம். (யாழ். அக.) 1. See முகனை, 1, 2, 3. 2. Bottom of the nose; மூக்கினடி.
முகரி&sup4; mukari
, n. See மூரி. (யாழ். அக.)
மூரி என்ற சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்களை சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி காட்டுகிறது.
மூரி mūri
, n. [T. K. M. Tu. muri.] 1. Strength; வலிமை. (பிங்.) மூரி வெஞ்சிலை (கம்பரா. கும்பகருண. 26). 2. Greatness; பெருமை. மூரிக்கடற்றானை (பு. வெ. 3, 3). (பிங்.) 3. Antiquity; பழமை. (W.) 4. Old age; கிழம். மூரி யெருத்தாலுழவு (இன். நாற். 21). 5. Buffalo; எருமை. மோட்டிள மூரி யுழக்க (கம்பரா. அகலிகை. 69). (பிங்.) 6. [M. mūri.] Ox, bullock; எருது. நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு (பதிற்றுப். 67, 15). (பிங்.) 7. Taurus of the zodiac; இடப ராசி. (திவா.) 8. Hump; திமில். (யாழ். அக.) 9. cf. முரி. Bit, part; துண்டம் வெண்ணிண மூரி யருள (புறநா. 393). 10. See முகரியோலை. (W.) 11. Enmity; முரண். (பிங்.) 12. Laziness, indolence; சோம்பல். (பிங்.) 13. Shaking off laziness; சோம்பல் முரிப்பு. பொய்த்ததோர் மூரியா னிமிர்ந்து (கம்பரா. உண்டாட். 35). 14. cf. முரி. Crack, breach; நெரிவு. (W.)
இவற்றில் சோம்பலுக்குப் பேர் போன விலங்கு (மா) எருமையே என்பதால் மாமுகரி என்ற சொல் எருமை மாட்டினையே குறித்து நிற்கின்றது என்று தெளியலாம்.

எருமையும் மானும் புல்லைத் தின்னும் விலங்குகளே ஆனாலும் இரண்டின் செயல்பாடுகளில் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கிறது பாருங்கள். இவ் இரண்டின் தன்மைகளைக் கொண்டு ஒரு அரிய கருத்தினை குறளில் புகுத்திய வள்ளுவனின் நுண்மாண் நுழைபுலம் வியந்து பாராட்டத் தக்கதன்றோ!
............................................... வாழ்க தமிழ்!...................................................
வணக்கம்.வாழ்க தமிழ்! வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது! என்று இங்கிட்டும் அங்கிட்டும் ஓடுகிறார்போல் செய்வது எவ்வாரு என்று எனக்கு எழுதுங்களேன். உதவியாய் இருக்கும். asokanvvr@gmail.com
பதிலளிநீக்குsnackwebsites.com என்ற விளம்பரத்தைப் பார்த்து அதில் போனால் முன்னே பின்னே போகும்படி செய்யலாமோ என்று போய் inpower4.snack.ws என்று ஓப்பன் பண்ணியதுதான் மிச்சம். ஓடவில்லை. ஆனால் ப்ளாக் நன்றாக உள்ளது. நன்றி...நன்றி...
பதிலளிநீக்குகருத்துக்கு மிக்க நன்றி. இப்போது அந்த விளம்பர வாசகம் வேலை செய்யவில்லை. ஏதோ கோளாறு போலத் தெரிந்ததால் விட்டுவிட்டேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
நீக்குசமீப காலமக குறளின் மீது பற்றிக் கொண்ட ஆர்வத்தின் காரணமாக இந்தக் குறளுக்கு பொதுவில் பகிர்ந்திருக்கும் விளக்கம் ஒவ்வாது சிறிதே அகழ்ந்தெடுக்க முயன்ற போது எனது எண்ணமும் கிட்டத்தட்ட இந்தப் பொருளை ஒட்டியே வந்தமர்ந்தது.
பதிலளிநீக்குஆனாலும் ஒரு இடத்தில் நான் கரை தட்டி நிற்கிறேன்.
மடியிலுளாள் - என்று குறள் கூறுகிறது.
இங்கும் நாம் பெண்பால் விகுதியை மாற்ற வேண்டுமோ
மடியுளாள் = மடி+உள்+ஆள் அதாவது மடியினை உடைய ஆள் என்று விரியும். பொதுவாக ஆள் என்பது ஆண்மகனைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது என்பதால் விகுதியை மாற்ற வேண்டிய தேவையில்லை. சில நூல்களில் மடியுளான் என்று பாடபேதமாகவும் இருக்கிறது. மடியுளான் என்றாலும் மடியுளாள் என்றாலும் ஆண்மகனையே குறிக்கிறது. மிக்க நன்றி. :))
நீக்கு